E-Commerce வரமா ? சாபமா ?

 E-Commerce வரமா ? சாபமா ?







இன்று அனைவருக்கும் காற்று  எவ்வளவு முக்கியமோ  அந்த  அளவுக்கு  இன்டர்நெட் என்பது  முக்கியமான  ஒன்றாக அமைந்துவிட்டது . அம்மா  அப்பா  கூட இல்லாமல் இருந்து  விடுவார்கள் ஆனால் இன்டர்நெட் இல்லாமல் இருப்பார்களா  என்பது சநதேகம் தான் . அப்படிப்பட்ட இன்டர்நெட்  மூலம் பல  துறைகள்  பிரமாண்ட  வளர்ச்சி அடைந்துள்ளது . அதில்  ஒன்று  தான் E-Commerce என்னும் மின்வணிகம் . 

இன்று  கைபேசி  பயன்படுத்த தெரிந்த அனைவரின் கைபேசியிலும் இந்த E-Commerce செயலிகள் நிச்சயமாக இருக்கும்.  இந்த மின்வணிக  தளங்களை  மக்கள்  தேடி  செல்ல பார்க்கப்படும் இரண்டு காரணங்கள். ஒன்று வீட்டிலிருந்தே ஷாப்பிங் செய்யலாம் இரண்டாவது குறைந்த விலையில் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர் . நமது  கடைத்தெருக்களில் கிடைக்காத  பல பொருட்கள்  கூட  ஆன்லைனில் கிடைப்பதாக கூறப்படுகிறது . பண்டிகை நாட்களில்  இந்த தளங்களில்  கொடுக்கப்படும் சிறப்பு தள்ளுபடி  இன்னும்  மக்களிடம் வரவேட்பை  பெற்றுள்ளது. 

இப்படிப்பட்ட  ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்னும்  சிலபல குறைகள்  இருக்க தான் செய்கிறது . நாம்  ஆர்டர்  செய்தால்  நான்கு  முதல்  ஐந்து நாட்கள் கழித்து  தான்  நமது  கைக்கு  கிடைக்கும் . மற்றோன்று  நாம்  ஆர்டர்  செய்யும்  பொருள் சில  சமயங்களில் வேறு  பொருளாகவோ அல்லது உடைந்தோ வர  வாய்ப்புள்ளது . ஆகவே நாம்  பரிசளிக்க  விரும்பினால் மேற்கண்ட  காரணகளால் தடை பட வாய்ப்புகள் அதிகம். 

நாம்  கடைக்கு  சென்று  நமது  கண்களால்  பார்த்து  நல்ல  பொருட்களை  தேர்வு செய்து வாங்குவது சிறந்தது . இதன் மூலம்  நமக்கு அருகாமையில் உள்ள சில்லறை வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் .  நமது  தெருவுக்கு அருகில்  உள்ள கடைகளில்  கூட இப்போது  EMI வசதி  மூலம் பொருட்கள்  பெற்றுக்கொள்ளலாம் . ஆகவே  நம் முழுதும் ஆன்லைன்  முறையை  நம்பி இல்லாமல் நமது  வியாபாரிகளுக்கும் பெரும்  உதவியாக  இருக்கும் . 

Comments

Popular posts from this blog

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு