Posts

Showing posts from August, 2020

அழகர் மலை பதினெட்டம்பபடி கருப்பண்ணசாமி கோவில் வரலாறு

Image
 அழகர் மலை பதினெட்டம்படி கருப்பண்ணசாமி கோவில்  வரலாறு  !!!!. 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று சிலப்பதிகாரத்தில் அழகர் கோவிலைப் பற்றி திருமாலிருஞ்சோலை பற்றி நமக்கு செய்திகள் வருகின்றன. மாடல மறையோன் சொல்லுகிறபோது மதுரை உடைய  வழியை சொல்லுகிறபோது சிலப்பதிகாரத்தில் அந்த அழகர் மலையை பற்றி சொல்கிறார். பரிபாடல் பற்றி சொல்கிறது எத்தனையோ அழகரந்தாதி, அழகர் கலம்பகம், கிள்ளைவிடு தூது ஆகிய நூல்கள் கூறுகின்றது . இந்த பெருமை மிகுந்த திருமாலிருஞ்சோலை 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று என்பதனை  ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்கள்  குறிப்பாக பெரியாழ்வாரும், ஆண்டாளும் தன்னுடைய நிறைவு காலத்தினை இங்கு தான் கழித்தார்கள் . நாச்சியார் திருமொழி எல்லாம் இந்த கோவிலை பற்றி கூறுகிறது.கோவிலுக்கு வெளியே  சன்னதி ஒன்று இருக்கிறது. அங்கு உருவமில்லை பெரிய கதவு அந்த கதவை திறந்தாள்   18 படிகள்  இருக்கும். ஒரு ஆள் உயரத்துக்கு மேல் ஒரு அருவாள் இருக்கும். பெரிய பாதுகைகள் இருக்கும் அந்தக் கடவுளுக்குத்தான்  மாலை போட்டு இந்த பதினெட்டாம்படி கருப்பு என கும்பிடுகிறார்கள்.   இந்த பதினெட்டாம்படி கருப்பு யார் அவர் ஏன் இங்கு வந்து இருக்கிறார் இதுக்கான

மக்களின் அதிபர் பிடெல் காஸ்ட்ரோ !!!!.

Image
 மக்களின் அதிபர்   பிடெல்  காஸ்ட்ரோ  !!!!.  உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய  ஒரு மனிதன்.  அதாவது சர்க்கரைக் கிண்ணம் அப்படின்னு ஒரு நாட்டுக்கு பேரு அந்த நாட்டுக்கு அந்த பேரு ஏன் வந்தது அங்கு தான் அதிகமாக கரும்பு விளைந்தது தேன் கிண்ணம் சொல்ற மாதிரி சர்க்கரை கிண்ணம் நாடு கியூபா. உலக வல்லரசான  அமெரிக்காவைப் பிடரியை  பிடித்து ஆட்டிய பெருமை அந்த கியூபாவுக்கு  உண்டு . 1926 ஆம் ஆண்டு அங்கு ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார் பிடல் காஸ்ட்ரோ .  அவருடைய தந்தையார் ஒரு பெரிய பண்ணையார்,  அவருடைய தாயார்  நல்ல வளர்ப்பின் காரணமாக இவரும் கடும் உழைப்பாளியாக மாறி இவருடைய உழைப்பின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை எல்லாம் உருவாக்கி அங்கு உள்ளவர்களுக்கெல்லாம் வேலை கொடுத்து ஒரு அற்புதமான விவசாயியாக  திகழ்ந்தார்.  மூன்று முறைகள் மூலமாக அந்த நாட்டை ஆண்டார்.  கம்யூனிசம் என்கிற அந்த பொதுவுடைமை சித்தாந்தத்தை இவர் கேள்விப்பட்டதில்லை. மேல்படிப்புக்கு செல்லும்போது கம்யூனிசம்   பற்றி கேள்விப்பட்டார்.   லெனின் பற்றியும் ரஷ்ய புரட்சியைப்  பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை அவர்